search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்ணிடம் செல்போன் பறிப்பு"

    பெண்ணிடம் செல்போன் பறித்து தப்பிய கொள்ளையர்கள் விபத்தில் சிக்கியதால் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பழாஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் லோகேஸ்வரி. பனியன் தொழிலாளி, இவர் திருப்பூர் மங்கலம் சாலையில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

    சம்பவதன்று லோகேஸ்வரி வேலை முடிந்து பஸ்சுக்காக மங்கலம் சாலை, தாடிகார முக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் லோகேஸ்வரி கையில் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி செல்ல முயன்ற போது, லோகேஸ்வரி திருடன்...திருடன்.. என சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அப்பகுதியில் சென்றவர்கள் கொள்ளையர்களை விரட்டியுள்ளனர். இதனிடையே செல்போனை பறித்த வேகத்திலும், பொது மக்கள் விரட்டிய பதட்டத்தில் சென்ற கொள்ளையர்கள் சிறிது தூரத்தில் வாகனத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தனர். உடனே பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து மத்திய போலீசார் கொள்ளையர்கள் இரண்டு பேரிடம் நடத்தி விசாரனையில் , பெண்ணிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது திருப்பூர் சிறுபூலுவப்பட்டியை சேர்ந்த வெங்காளீஸ்வரன் மற்றும் சூரியகுமார் என்பதும், திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்டு வந்ததும் போலீசார் விசாரனையில் தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

    சேலையூர் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் செல்போன் பறித்த 2 சிறுவர்களை போலீசார் கைது செய்து செங்கல்பட்டு சீர்திருத்தப்பள்ளில் சேர்த்தனர்.
    சென்னை:

    அனகாபுத்தூரை சேர்ந்த ப்ரீத்தி (20). ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சேலையூர் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக நேற்று காத்து நின்றார். செல்போனில் பேசியபடி நின்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் செல்போனை பறித்துவிட்டு தப்பி சென்றனர்.

    இதுபற்றி ப்ரித்தி போலீசில் புகார் செய்தார். குரோம்பேட்டை போலீஸ் சானடோரியத்தில் இருந்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த சிறுவர்கள்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    அவர்களிடம் விசாரணை நடத்தியதில் செல்போனை பறித்து சென்றதை ஒப்புக் கொண்டனர். போலீசில் சிக்கிய2 சிறுவர்களும் 16 வயதுக்கு உட்பட்டவர்கள். ஒருவன் ஐ.டி.ஐ.யும், மற்றொருவன் 10-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இருவரும் செங்கல்பட்டு சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
    ×